ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!

ஹிஸ்புல் முஜாகிதீன்  இயக்கத்தின் தலைமை கமாண்டராக கருதப்பட்ட புர்கான் வானியை இந்திய ராணுவத்தினர் நேற்று(வெள்ளி)  சுட்டுக் கொன்றனர். இது இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.

கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை நேற்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


EmoticonEmoticon

Ads Inside Post