எல்லாம் ரஜினிக்கு அப்புறம்தான்! முதலில் கபாலி அடுத்து தொடரி!



பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “தொடரி”. தனுஷ் நடித்திருக்கும் ரொமாண்டிக் காதல் கதையான இப்படத்தின் ரிலீஸ் பற்றியான செய்திகள் அவ்வப்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பினைப் பற்ற வைத்துவிடும்.

தற்போது,  தொடரி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமை சுதந்திர தினமென்பதால் இடைப்பட்ட நாட்களில் படம் ரிலீஸானால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடும் என்றும் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்ற நோக்கில் ஆகஸ்ட் 12ம் தேதியை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது.

தொடரியின் இறுதிக்கட்ட பணிகளில் படத்தின் இயக்குனர் பிரபுசாலமன் பிஸியாக இருக்கிறாராம். மொத்த படக்குழுவுமே சொன்சார் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது. சென்சார் முடிந்தபின்னரே வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த மாதமே தொடரியை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்களாம் படக்குழுவினர். ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி இந்த மாதம் வெளியாகவிருப்பதால், தொடரி படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் சுதந்திரதின விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியாகிறது தொடரி.

இப்படத்திற்கு இசை இமான். தம்பிராமையா, கணேஷ் வெங்கட்ராமன், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மைனா,கும்கி என்று தொடர் ஹிட் அடித்த பிரபு சாலமன் தொடரியிலும்  வெற்றிக்கு கொடி நாட்டுவார் என்கிறார்கள் தொடரி படக் குழுவினர்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post