’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்!’



இந்த வாரத்தில் தென்னிந்திய சினிமா உலகின், பத்து சுவாரஸ்ய சினிடாக்ஸை இங்கே பார்க்கலாம்:
மிழ் தெலுங்கு என இருமொழிகளில் முருகதாஸ் இயக்க, மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதனால், தேதிகள் ஒத்துழைக்காததால் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷின் வில்லனாகும் வாய்ப்பைத் தவறவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

ரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60வது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட விஜய்க்கான பாடல்களில் இதுதான் உச்சமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மு
தன்முதலான கன்னடத்தில் நடிக்க இருக்கிறார் அமலாபால். எஸ். கிருஷ்ணா இயக்கத்தில் இவர் ஜோடி சேர இருப்பது ‘சுதீப்’புடன். ‘நான் ஈ-ல அவர் நடிப்பு அவ்வ்வ்ளோ பிடிக்கும்’ என்கிறார் அமலா பால்!

ளையராஜாவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், யுவன்ஷங்கர்ராஜாவுக்கு பாடல் எழுதத் தயங்குவதில்லை வைரமுத்து. அமீர் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் படத்திற்கு யுவன் இசையில் ஜல்லிக்கட்டைக் குறித்து எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு!

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் கத்தி படத்தில், ஹீரோ சிரஞ்சீவிக்கு அனுஷ்கா அல்லது நயன்தாரா ஜோடியாக களமிறங்கலாம் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடையில் கௌரவத்தோற்றங்களில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியை நாயகான காணவிருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு படத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.

னுஷ் நடிக்கும்  தொடரி படம், இரண்டு இரவுகள் + ஒரு பகலில் நடக்கும் சம்பவங்களாம். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்தபிறகு, திடீரென்று நாசரை அழைத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
சுசீந்திரனின் இயக்கத்தில், உதயநிதி நடிக்கும் படத்தில் இமான் இசையில் பெண்களின் பெருமைகளைப் பேசும் பாடல் ஒன்றையும் எழுதியிருக்கிறார் வைரமுத்து. இந்தப் பாடல் பற்றி சுசீந்திரன் கூறுகையில், ‘பீப் பாடல்களுக்கு மத்தியில், பெண்களைப் புகழ்கிற ‘டாப்’ பாடலாக இது இருக்கும்’ என்றார்.

சென்னை 600028 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லன் வேடத்தில் அபினய் என்றொரு இளைஞர் நடிக்கவிருக்கிறார். யார் இவர் தெரியுமா? ஜெமினிகணேசன் - சாவித்ரி ஜோடியின் பேரன்!

ஜோதிகாவுடன் சூர்யா இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. மூன்று கதைகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடுவேன் என்றும் சூர்யா கூறியுள்ளார்.


EmoticonEmoticon

Ads Inside Post